Saturday, March 21, 2015

3

பால்வெல்லம் இணங்காமை  Lactose intolerance
பால் சமிபாடடைவதில் சிக்கல் இருப்பதை மருத்துவத்தில் லக்டோஸ் இன்ரொலரன்ஸ் என்பார்கள். லக்டோஸ் lactose என்பது பாலில் உள்ள சீனிப் பதார்த்தமாகும்.  லக்டோசில் இரண்டு வகையான இனிப்புகள் இணைந்துள்ளன. glucose and galactose  என்பனவே அவை. அவற்றை ஒன்றிருந்து மற்றதைப் பிரித்து உணவுக் குழாயால் உறிஞ்சப்படுவதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கு லக்டேஸ் (Lactase)  என்ற நொதியம் தேவை.
இந்த நொதியம் ஒருவரது உணவுக் கால்வாயால் முற்று முழுதாகச் சுரக்கப்படாமல் இருந்தாலோ அல்லது போதியளவு சுரக்காமல் இருப்பதால்தான் இக் குறைபாடு ஏற்படுகிறது.
lactose-intolerance1-624x468

Read more ...

2

“விருந்தினர்கள் வந்திருக்கும் போது டொயிலற்றுக்குப் பேகக் கூடாது” இது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. புறபற சத்தம் அருகில் உள்ள வரவேற்பரை சத்தம் கேட்குமே என்ற வெக்கையீனம் அவளுக்கு.
இவை எல்லாம் பயிற்றங்காய், உருளைக் கிழங்கு, பருப்பு போன்ற வாய்வு பண்டங்களைச் சாப்பிட்டதால் என எண்ணியிருந்தார். அவை காரணமல்ல என்பது இப்பொழுதுதான் புரிகிறது.
ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் கணக்கு வைப்பார்கள் இவர் எத்தனை தடவைகள் மலம் கழிக்கச் செல்கிறார் என்று. காலையில் வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் கட்டாயம் ஒரு தடவை. முதிய உணவிற்கு சற்று முன்னர் மற்றொரு தடவை தப்பாது.
இந்த ஒரு வாரமாக இவை எதுவுமே அவருக்கு இல்லை.
டொக்டரின் அறிவுரைப்படி பால் குடிப்பதை நிறுத்திய பின்னர்தான் அவருக்கு இந்த நிம்மதி கிடைத்தது. வழமையாகப் பால் குடிப்பது நல்லது என்று சொல்கிற மருத்துவர்தான் இவரை மட்டும் பால் குடியாதே என அறிவுறுத்தி இருந்தார். காரணம் அவரது உணவுத் தொகுதியால் பாலை சமிபாடடையச் செய்ய முடிவதில்லை.
lactose-intolerance-breakfast-lactose-intolerant-620x476-620x476
Read more ...

1

மகிழ்ச்சி பொங்கிவழிந்தது. நீண்ட காலத்தின் பின்னர் கிட்டிய ஆனந்தத்தில் திளைத்தார்.
புதுப் பிறவி எடுத்தது போன்ற புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.
எதுவித உபத்திரமும் தராமல் பேரமைதி குடிகொள்ள கம்மென்று அடங்கிக் கிடந்தது வயிறு. எத்தனை துன்பங்களை அனுபவித்துவிட்டார். அவமானங்கள் சொல்லியடங்காது.
Passing_Gas
கடாமுடா என்ற சத்தம் அவரது வயிற்றில் திடீரென எழும்பும். பல தருணங்களில் அருகில் இருப்பவர் இவரை புதினமாகப் பார்க்கும் அளவிற்கு அது பலமாக ஒலிக்கும். வேளை கெட்ட தருணங்களில் பறபற வென மலவாயிலால் வாய்வு ஆரவாரமாக வெளியேறும்.
வயிறு முட்டுமாப்போல அந்தரம் கொடுக்க சற்றே பிட்டத்தை ஒரு புறம் உயர்த்தி வாய்வைத் தானாகவே வெளியேற்ற நேர்வதும் உண்டு. தலைகுனிந்து சத்தம் எழுப்பாது சிரிப்பார்கள் அருகில் இருப்பவர்கள்.

Read more ...