“விருந்தினர்கள் வந்திருக்கும் போது டொயிலற்றுக்குப் பேகக் கூடாது” இது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. புறபற சத்தம் அருகில் உள்ள வரவேற்பரை சத்தம் கேட்குமே என்ற வெக்கையீனம் அவளுக்கு.
இவை எல்லாம் பயிற்றங்காய், உருளைக் கிழங்கு, பருப்பு போன்ற வாய்வு பண்டங்களைச் சாப்பிட்டதால் என எண்ணியிருந்தார். அவை காரணமல்ல என்பது இப்பொழுதுதான் புரிகிறது.
ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் கணக்கு வைப்பார்கள் இவர் எத்தனை தடவைகள் மலம் கழிக்கச் செல்கிறார் என்று. காலையில் வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் கட்டாயம் ஒரு தடவை. முதிய உணவிற்கு சற்று முன்னர் மற்றொரு தடவை தப்பாது.
இந்த ஒரு வாரமாக இவை எதுவுமே அவருக்கு இல்லை.
டொக்டரின் அறிவுரைப்படி பால் குடிப்பதை நிறுத்திய பின்னர்தான் அவருக்கு இந்த நிம்மதி கிடைத்தது. வழமையாகப் பால் குடிப்பது நல்லது என்று சொல்கிற மருத்துவர்தான் இவரை மட்டும் பால் குடியாதே என அறிவுறுத்தி இருந்தார். காரணம் அவரது உணவுத் தொகுதியால் பாலை சமிபாடடையச் செய்ய முடிவதில்லை.

No comments :
Post a Comment