மகிழ்ச்சி பொங்கிவழிந்தது. நீண்ட காலத்தின் பின்னர் கிட்டிய ஆனந்தத்தில் திளைத்தார்.
புதுப் பிறவி எடுத்தது போன்ற புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.
எதுவித உபத்திரமும் தராமல் பேரமைதி குடிகொள்ள கம்மென்று அடங்கிக் கிடந்தது வயிறு. எத்தனை துன்பங்களை அனுபவித்துவிட்டார். அவமானங்கள் சொல்லியடங்காது.
கடாமுடா என்ற சத்தம் அவரது வயிற்றில் திடீரென எழும்பும். பல தருணங்களில் அருகில் இருப்பவர் இவரை புதினமாகப் பார்க்கும் அளவிற்கு அது பலமாக ஒலிக்கும். வேளை கெட்ட தருணங்களில் பறபற வென மலவாயிலால் வாய்வு ஆரவாரமாக வெளியேறும்.
வயிறு முட்டுமாப்போல அந்தரம் கொடுக்க சற்றே பிட்டத்தை ஒரு புறம் உயர்த்தி வாய்வைத் தானாகவே வெளியேற்ற நேர்வதும் உண்டு. தலைகுனிந்து சத்தம் எழுப்பாது சிரிப்பார்கள் அருகில் இருப்பவர்கள்.

No comments :
Post a Comment